திங்கள், 18 செப்டம்பர், 2017

                                         பாராட்டுச்சான்றிதழ்


                    சிவஸ்ரீ.   அருண சுந்தர சிவாச்சாரியார் .எம்.ஏ..எம்ஃபில்.பிஹெச்டி
                                      மயிலாப்பூர்
                                      சென்னை


மேதகு சான்றீர், வணக்கம்.எனது 75  ஆம் அகவை நிறைவு விழா தொடர்பாக
17.9.2017 அன்று   தருமபுரம் ஆதீனம் சமயப்பிரச்சார நிலையம்,சென்னை
தி.நகரில் நடைபெற்ற "சைவாகமக் கருத்தரங்கில் கலந்து கொண்டு,
"ஞான பாதம் " என்னும் தலைப்பில் தாங்கள் ஆற்றிய பேருரை ,என்னையும்,
அவையினரையும் வெகுவாகக் கவர்ந்தது.சாத்திர மேற்கோள்கள்,சான்றுகள்
காட்டி,சிவாகம விளக்கமாய் அமைந்த தங்களின் உரைக்கு மனமார்ந்த
நன்றியைத் தெரிவிப்பதோடு,போற்றுதலையும்,பாராட்டுதலையும் இக்கடித
வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                         நன்றியும் வணக்கமும்

19.9.2017                                                                                                            தங்கள்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக