புதன், 1 பிப்ரவரி, 2017

சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கும்
             இளவரசுப் பட்டம் ஏற்ற
ஶ்ரீலஶ்ரீ. மாசிலா மணி தேசிக சுவாமிகள்
              அவர்களுக்கு
           வாழ்த்துப் பா




சைவத்  திருவளர்  சிவ்வழி  போற்றும்
தருமைத் தவமடம்  தண்மை   நவமடம்
பெருமை   பேணும்   குருமஹா   சந்நிதானம்
அருகில்   அமர்ந்து   அறவழிப்  பயணம்
திருவருள் கூடிய.  தம்பிரான்  சுவாமிகள்
வாசிவாசி   என்றே   வாயாராப்   போற்றும்
மாசிலா   மாணிக்க மௌனகுரு   சுவாமிகள்
மாசிலா   மணிதே   சிகரெனும்   மாப்புகழ்
ஆசிகுரு   அளித்த   அறப்பணி   தொடக்கம்
சைவம்   தழைக்கும: சமயம்   வளரும்:
சிவனருட்   செல்வர்   சிந்தை   எல்லாம்,
தவமாம்   தமிழும்   த்த்துவ   உரையாம்,
உலகச்   சான்றோர்   ஒன்று   கூடுவர்:
பலகலைக்   கோயில்கள்   பாங்குடன்   வளரும்,
இனிய   பட்டம்.  கனிந்த   திருநாள்  
அணிந்த   பட்டம்   அறத்தின்   நன்னாள்,
அணிவேல்   முருகன்.  அருளுக   புகழினை,
வாழ்கவே.  வண்டமிழ்   வளமார்   சுவாமிகள்,
வாழ்கவே   சைவநெறி: அறப்பணி   வளர்கவே,




2.2.17
ஆஸ்திரேலியா.  ( இருப்பு).                               தங்கள். தமிழ்.  போற்றும்
                         
                                                                           சுவாமி,சுப்பிரமணியன்                                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக