செவிலி இரங்கல்
எண்சீர் ஆசிரிய விருத்தம்
நற்றிறம் உற்ற நலமிகு தலைவி,
நந்தி சூழ்ந்த நான்மறை நாதன்
கற்றவர் சூழ்ந்த கன்னிமா நகரில்
கலைமகள் பாடவும்,கணங்கள் போற்றவும்
பற்றிலாப் பற்றுடன் பரதம் ஆட்டினான்
பார்த்தனள் பரவசம் மேலிடப் பறிகொடுத்தாள்:
உற்றனள் காதல்:உடலுளம் வருந்த,
உறக்கமும் இல்லா உறுதுயர் என்சொல?
பொருள்
தலைவியின் மனநிலை கண்டு செவிலி வருந்திக் கூறுவது.
நற்குடித் தோன்றிய நல்லவாளாம் தலைவி,ஒருநாள் கன்னியாகுடி கோயில் சென்றாள்:
அங்கு,நந்தியின் தாளமும்,கலைமகள் பாடலும்,கணங்கள் போற்றலும் கொண்ட
பேரவையில் கைலாச நாதன் மெய் மறந்து ஆசை பற்றாமலும்,அபிநயம் பற்றியும் ஆனந்த
நடனம் ஆட்டினான்:அந்த நடன மூர்த்தியைக் கண்ட தலைவி,அவனோடு ஒன்றி விட்டாள்:
உள்ளமெல்லாம் காதல் சிந்தனை,உடலும் உள்ளமும் பிரிவு வேதனை,உறக்கமும் மகிழ்வும்
துறந்த பெருந்துயருக்கு ஆளாகி நிற்கிறாள்.அவளின் நிலையை என்ன சொல்லி மாற்ற இயலும்?
எனப் புலம்புகிறாள் செவிலி.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
நற்றிறம் உற்ற நலமிகு தலைவி,
நந்தி சூழ்ந்த நான்மறை நாதன்
கற்றவர் சூழ்ந்த கன்னிமா நகரில்
கலைமகள் பாடவும்,கணங்கள் போற்றவும்
பற்றிலாப் பற்றுடன் பரதம் ஆட்டினான்
பார்த்தனள் பரவசம் மேலிடப் பறிகொடுத்தாள்:
உற்றனள் காதல்:உடலுளம் வருந்த,
உறக்கமும் இல்லா உறுதுயர் என்சொல?
பொருள்
தலைவியின் மனநிலை கண்டு செவிலி வருந்திக் கூறுவது.
நற்குடித் தோன்றிய நல்லவாளாம் தலைவி,ஒருநாள் கன்னியாகுடி கோயில் சென்றாள்:
அங்கு,நந்தியின் தாளமும்,கலைமகள் பாடலும்,கணங்கள் போற்றலும் கொண்ட
பேரவையில் கைலாச நாதன் மெய் மறந்து ஆசை பற்றாமலும்,அபிநயம் பற்றியும் ஆனந்த
நடனம் ஆட்டினான்:அந்த நடன மூர்த்தியைக் கண்ட தலைவி,அவனோடு ஒன்றி விட்டாள்:
உள்ளமெல்லாம் காதல் சிந்தனை,உடலும் உள்ளமும் பிரிவு வேதனை,உறக்கமும் மகிழ்வும்
துறந்த பெருந்துயருக்கு ஆளாகி நிற்கிறாள்.அவளின் நிலையை என்ன சொல்லி மாற்ற இயலும்?
எனப் புலம்புகிறாள் செவிலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக