இரங்கல்
வெண்கலிப்பா
மனத்தகத்து மறைவானை,மறையாத மனத்தானை,
வனத்திடையே புணர்ந்தானைப்,புணராதகோ வணத்தானை,
சினத்தாலே சிலையழித்துச் சிலைக்கருளும் சினத்தானை,
பனிக்காலப் பழியேற்றுப் பழிநிலவாப் பனியானை,
முனிபோற்றும் மூதுரையான்,முதுநிலவு முனியானை,
கனிபோற்றக் கணபதியும்,கணம்போற்றக் கனிமலையும்,
அணியங்கம் அலைத்தலையும் அலைபாயா அணியானை,
மணிமுத்தாள் மனங்கொண்டாள்:மணங்கொண்டால் மணியாவாள்.
பிணிதீர்க்கும் கன்னியானோ கன்னியவள் பிணிபோக்கான்?
கணமாலை கரந்தந்து கரமேற்கக் கணநாதன்.
மணமாலை மங்கையவள் மங்குகுண மனம்மாற்றும்:
தணலேந்தி தண்குணமே தன்குணமாம்
குணமெட்டுக் குணத்திலே குணக்காதல் சால்பு.
பொருள்
தலைவியின் காதல் கை கூடா நிலை கண்டு,செவிலி இரங்கிக் கூறுதல்
தலைவியின் மனத்திலே ஒளிந்திருப்பவன்,அவள் மனத்தை விட்டு மறையாதவன்,
காட்டுச்சோலையிலே தலைவியைப் புணர்ந்தவன்,ஆயினும் எந்தப் பெண்ணையும்
விரும்பாத பிட்சாண்டவன்:
சினத்தால் மன்மதனை எரித்தவன்:ஆயினும் சிலை போன்ற இரதிக்குக் கருணை காட்டியவன்:
கார்காலத்தில் தலைவியைப் பிரிந்து பழிக்கு ஆளானவன்,ஆயினும் குற்றமற்ற கைலை
மலையில் வீற்றிருப்பவன்:
ஆசையில்லா ஞானத்தை முனிவர்களுக்கு அருள்பவன்,ஆயினும் ஆசை நிலவின் மீது
கோபமுறாமல் தலையில் ஏற்றவன்:
கனியைப் பெறப் பெருஞானவழி தேடிய கணபதியும்,கனியால் சினந்து,தனியான பழனி
ஆண்டியும்,மலைமகளும்,தலையில் கங்கையும் கொண்டு விளங்கினாலும்,சஞ்சலம் இல்லாத
யோக நிஷ்டை உடையவன்:
இத்தகைய குணம் கொண்டவன் மீது காதல் கொண்டாள் தலைவி,தலைவன் மனம் இவளை
ஏற்றால் இவள் மேலும் அழகு பெறுவாள்:
நோய் தீர்க்கும் கன்னியாகுடிக் கைலாசநாதனோ தலைவியின் மன நோயைத் தீர்க்கக் காலம்
கடத்துகிறான்:
வேத மந்திரங்களை மாலையாக அணிந்திருக்கும் ஈசன் இவளுக்கு மணமாலையை அருளின்,
இவளது துயர் நீங்கும்,மகிழ்வும் பெறுவாள்:
நெருப்பைக் கரத்திலே தங்கியவன்:ஆயினும் குளிர் கருணை கொண்ட குணம் உடையவன்:
எட்டுக் குணங்களைக் கொண்ட எம்பிரான் காதல்குணமும் கொன்டு இவளுக்கு அருளல்
வேண்டும்,என,செவிலி இரங்கிக் கூறுகிறாள்.
விளக்கம்
இப்பாடலில் அடிகளில் வந்துள்ள சொற்கள் வேறுபட்ட பொருள்களிலும்,மாறுபட்ட சந்தத்திலும்
வந்தமை காண்க,
வெண்கலிப்பா
மனத்தகத்து மறைவானை,மறையாத மனத்தானை,
வனத்திடையே புணர்ந்தானைப்,புணராதகோ வணத்தானை,
சினத்தாலே சிலையழித்துச் சிலைக்கருளும் சினத்தானை,
பனிக்காலப் பழியேற்றுப் பழிநிலவாப் பனியானை,
முனிபோற்றும் மூதுரையான்,முதுநிலவு முனியானை,
கனிபோற்றக் கணபதியும்,கணம்போற்றக் கனிமலையும்,
அணியங்கம் அலைத்தலையும் அலைபாயா அணியானை,
மணிமுத்தாள் மனங்கொண்டாள்:மணங்கொண்டால் மணியாவாள்.
பிணிதீர்க்கும் கன்னியானோ கன்னியவள் பிணிபோக்கான்?
கணமாலை கரந்தந்து கரமேற்கக் கணநாதன்.
மணமாலை மங்கையவள் மங்குகுண மனம்மாற்றும்:
தணலேந்தி தண்குணமே தன்குணமாம்
குணமெட்டுக் குணத்திலே குணக்காதல் சால்பு.
பொருள்
தலைவியின் காதல் கை கூடா நிலை கண்டு,செவிலி இரங்கிக் கூறுதல்
தலைவியின் மனத்திலே ஒளிந்திருப்பவன்,அவள் மனத்தை விட்டு மறையாதவன்,
காட்டுச்சோலையிலே தலைவியைப் புணர்ந்தவன்,ஆயினும் எந்தப் பெண்ணையும்
விரும்பாத பிட்சாண்டவன்:
சினத்தால் மன்மதனை எரித்தவன்:ஆயினும் சிலை போன்ற இரதிக்குக் கருணை காட்டியவன்:
கார்காலத்தில் தலைவியைப் பிரிந்து பழிக்கு ஆளானவன்,ஆயினும் குற்றமற்ற கைலை
மலையில் வீற்றிருப்பவன்:
ஆசையில்லா ஞானத்தை முனிவர்களுக்கு அருள்பவன்,ஆயினும் ஆசை நிலவின் மீது
கோபமுறாமல் தலையில் ஏற்றவன்:
கனியைப் பெறப் பெருஞானவழி தேடிய கணபதியும்,கனியால் சினந்து,தனியான பழனி
ஆண்டியும்,மலைமகளும்,தலையில் கங்கையும் கொண்டு விளங்கினாலும்,சஞ்சலம் இல்லாத
யோக நிஷ்டை உடையவன்:
இத்தகைய குணம் கொண்டவன் மீது காதல் கொண்டாள் தலைவி,தலைவன் மனம் இவளை
ஏற்றால் இவள் மேலும் அழகு பெறுவாள்:
நோய் தீர்க்கும் கன்னியாகுடிக் கைலாசநாதனோ தலைவியின் மன நோயைத் தீர்க்கக் காலம்
கடத்துகிறான்:
வேத மந்திரங்களை மாலையாக அணிந்திருக்கும் ஈசன் இவளுக்கு மணமாலையை அருளின்,
இவளது துயர் நீங்கும்,மகிழ்வும் பெறுவாள்:
நெருப்பைக் கரத்திலே தங்கியவன்:ஆயினும் குளிர் கருணை கொண்ட குணம் உடையவன்:
எட்டுக் குணங்களைக் கொண்ட எம்பிரான் காதல்குணமும் கொன்டு இவளுக்கு அருளல்
வேண்டும்,என,செவிலி இரங்கிக் கூறுகிறாள்.
விளக்கம்
இப்பாடலில் அடிகளில் வந்துள்ள சொற்கள் வேறுபட்ட பொருள்களிலும்,மாறுபட்ட சந்தத்திலும்
வந்தமை காண்க,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக