புதன், 25 மே, 2016

நேரிசை வெண்பா

                             நேரிசை வெண்பா
மகிழ  மரத்தடி மாமுனிக் கூட்டம்
மகிழ்வாய் மனத்துறை ஞானம் ----அகிலம்
புகழும் புனிதம் புகன்றவன் கன்னித்
திகழும் திகம்பரன் தேடு .

                    பொருள்
மகிழ மரத்தடியில் சூழ்ந்து நிற்கும்,சனக,சனந்தன,சனாதன,
சனத்குமார முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அவர்களுக்கு
யோக நிழ்டை,அமைதி,மௌனம் உபதேசித்த கன்னியாகுடிக் கைலாசநாதக்
கடவுள் உலகோர் உய்யும் உயர் வழி காட்டினார்;அவரை அடி பணிந்து வணங்கு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக