கட்டளைக் கலித்துறை
கற்றார் மனத்துறை காசில் குணத்தவன் தாள்பணிவீர்!
சுற்றம் சுகமெனக் காலம் கழித்தது போதுமுணர்.
நற்றாய் அருள்நலம் நாளும் வழங்கிடும் கன்னியானைப்
பற்றின் பதஞ்சலி போலப் பதமதும் காட்டிடுவான். 3
பொருள்
நான்மறை,பன்னிருதிருமுறை சைவாகமங்கள் கற்றுணர்ந்து பக்தி கொண்ட சான்றோரின் மனத்தகத்தே வீற்றிருக்கும்,குற்றமற்ற குணக்குன்றாம் சிவபெருமான் பாதங்களைப் பணியுங்கள்;
உறவுமுறை,உல்லாசம் என வீணே காலம் கழித்தது போதும்.ஈன்றெடுத்த தாயைப்போல நம்மீது
அருளும்,இரக்கமும்,அன்பும் காட்டிடுவான் கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள,கைலாசநாதன்.
அவனது பாதாரவிந்தங்களைப் பற்றோடு பற்றினால்,பதஞ்சலி முனிவருக்கு அருளியது போன்ற
பதத்தை,இடத்தை நமக்கு வழங்குவான்.சிற்றம்பலத்தில் ஆடிக் காண்பித்த பதங்களைக் காட்டுவான்.
கற்றார் மனத்துறை காசில் குணத்தவன் தாள்பணிவீர்!
சுற்றம் சுகமெனக் காலம் கழித்தது போதுமுணர்.
நற்றாய் அருள்நலம் நாளும் வழங்கிடும் கன்னியானைப்
பற்றின் பதஞ்சலி போலப் பதமதும் காட்டிடுவான். 3
பொருள்
நான்மறை,பன்னிருதிருமுறை சைவாகமங்கள் கற்றுணர்ந்து பக்தி கொண்ட சான்றோரின் மனத்தகத்தே வீற்றிருக்கும்,குற்றமற்ற குணக்குன்றாம் சிவபெருமான் பாதங்களைப் பணியுங்கள்;
உறவுமுறை,உல்லாசம் என வீணே காலம் கழித்தது போதும்.ஈன்றெடுத்த தாயைப்போல நம்மீது
அருளும்,இரக்கமும்,அன்பும் காட்டிடுவான் கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள,கைலாசநாதன்.
அவனது பாதாரவிந்தங்களைப் பற்றோடு பற்றினால்,பதஞ்சலி முனிவருக்கு அருளியது போன்ற
பதத்தை,இடத்தை நமக்கு வழங்குவான்.சிற்றம்பலத்தில் ஆடிக் காண்பித்த பதங்களைக் காட்டுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக