சனி, 23 ஏப்ரல், 2016

வஞ்சி விருத்தம்

                                வஞ்சி விருத்தம்

கன்னி மன்னன் பொன்னடி
உன்னும் உலகம் உய்யுமே
வன்னி வில்வம் சடையிலே
பொன்னி பாக மேனியே.
                       பொருள்
கன்னியாகுடியில் குடிகொண்டுள்ள மன்னனாம் கைலாசநாதன் பொன்னடி கொண்டவன்:
அவனது பொன்னடிகளை நினைந்து போற்றினால் உலகோர் நற்பேறு அடைவர்:
வன்னியும்,வில்வமும் அணிந்த சடையை உடையவன்:
மலைமகளாம் கல்யாணி அம்மையை ஒரு பாகம் கொண்டவன் ஆவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக