நேரிசை வெண்பா
பொன்னிபாக மேனியான் பொங்குகங்கை சூடினான்
கன்னிவாழ் மென்மையாள் காதலேக்கத் ---தன்மையால்
அன்னமதைத் தூதனுப்ப, அன்னமோ அன்னையிடம்
உன்னும் வழியறியா ளே .
பொருள்
பார்வதியாம் கல்யாணி அம்மையைத் தன்னுடலில் சரிபாகம் கொண்டு விளங்கும்,
ஈசன் கங்கையையும் முடியில் சூடிக் கொண்டவன்:கன்னியாகுடியில் வாழும் மென்மையான
குணம் கொண்ட தலைவி,கைலாசநாதர் மீது,காதலுற்று,வாடி,முடிவில் ஓர் அன்னப்பறவையை
ஈசனிடம் தூது அனுப்புகிறாள்:அன்னப்பறவையோ ஈசன் அருகே இருந்த அம்மையின்
அழகும்,அவளின் ஊர்தியான தெய்வீக அன்னமும் மனதைக் கவர,அன்னையிடமே தங்கிவிட்டது:
மாலையும் வரவில்லை:அன்னமும் வரவில்லை:ஆற்றும் செயல் அறியாது தவிக்கிறாள் தலைவி.
பொன்னிபாக மேனியான் பொங்குகங்கை சூடினான்
கன்னிவாழ் மென்மையாள் காதலேக்கத் ---தன்மையால்
அன்னமதைத் தூதனுப்ப, அன்னமோ அன்னையிடம்
உன்னும் வழியறியா ளே .
பொருள்
பார்வதியாம் கல்யாணி அம்மையைத் தன்னுடலில் சரிபாகம் கொண்டு விளங்கும்,
ஈசன் கங்கையையும் முடியில் சூடிக் கொண்டவன்:கன்னியாகுடியில் வாழும் மென்மையான
குணம் கொண்ட தலைவி,கைலாசநாதர் மீது,காதலுற்று,வாடி,முடிவில் ஓர் அன்னப்பறவையை
ஈசனிடம் தூது அனுப்புகிறாள்:அன்னப்பறவையோ ஈசன் அருகே இருந்த அம்மையின்
அழகும்,அவளின் ஊர்தியான தெய்வீக அன்னமும் மனதைக் கவர,அன்னையிடமே தங்கிவிட்டது:
மாலையும் வரவில்லை:அன்னமும் வரவில்லை:ஆற்றும் செயல் அறியாது தவிக்கிறாள் தலைவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக