சனி, 23 ஏப்ரல், 2016

வஞ்சித்துறை

                                வஞ்சித்துறை

வணங்கிடுமே வான்மறை
மணந்திடுமே  மாச்சடை
தணலுற்ற   தளிர்க்கரம்
கணம்போற்றும்  கன்னியே .

                     பொருள்
வானளாவிய பெருமை கொண்ட நான்மறைகளால் போற்றப் படுபவன்:
கொன்றைமலரணிந்த நறுமணமிக்க செஞ்சடை கொண்டவன்:
அருள் பொழியும் மென்மைக் கரங்களில் தீயைத் தாங்கி விளங்குபவன்:
பூத கணங்கள் போற்றி வழிபடும் கைலாச நாதன் கன்னியாகுடியில்
வீற்றுள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக