நூல்
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
பொன்னானைப் பூத்துக் குலுங்கும் கொன்றையானை
பெண்ணாளைப் பாகம்கொடு தண்கன்னி காப்பவனை
மண்ணெல்லாம் புரப்பவனை மனத்தகத்தே நிலைத்திடுவோம்.
தாழிசை
அனலேந்தி அழலானான்:அணிகங்கை முடியமர்த்திப்
புனலானான்:புன்னாகக் கங்கணத்தால் புதுமையானான்:
வனக்காட்டில் பிணச்சாம்பல் தனைப்பூசி ஒளியானான்:
கணப்பூதம் சூழ்ந்துதொழும் கைலாசன் கன்னியானே .
வேள்விபலி தக்கனெனில் வேதபலி பிரம்மனாவான்:
கால்மிதித்து அந்தகனும்,கண்பொரித்து மன்மதனும் ,
சூலத்தால் காலயமன் சிரிப்பினால் திரிபுரமும்,
ஞாலம்கா சம்ஹாரன் கைலாசன் கன்னியானே.
சுந்தரனைப் பேசவிட்டுச் சொந்தபந்தம் காட்டியவன்:
மைந்தனழப் பாலூட்டிய மாதரசியின் உடனுறைவோன்:
நைந்தமனச் சமயத்தால் நைந்தவுடல் மாற்றியேற்றவன்:
ஐந்தெழுத்து அருள்நோக்கக் கைலாசன் கன்னியானே
தனிச்சொல்
எனப்போற்றி,
சுரிதகம்
முந்துதமிழ் முன்னோர்கள் மூவரிலும் மூத்தோனைச்
செந்தமிழால் போற்றிய செம்மைவழி -----வந்தமுறை
பைந்தமிழில் பாடலுற்றேன் பா.
சான்றோர் போற்றியே சாற்றினேன் கலம்பகம்
ஆன்ற கன்னி அற்புதன் புகழே. 2
பொருள்
பொன்னார் மேனியன்:பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்மாலை அணிந்தவன்:
மலைமகளை தன்னுடலில் ஒருபாகமாகக் கொண்டவன்;கண்ணியாகுடியையும்
உலகையும் காப்பவன்;கைலாசநாதர்"என்னும் திருப்பெயர் கொண்ட இறைவனின் புகழ்
பாடுதலே நூலின் நோக்கமாகும்.
தீயைக் கையிலே ஏந்தித் தீயாகவே காட்சி தருபவன்:தலையில் தாங்கிய கங்கையால்
குளிர்ச்சி மிக்க அருள் பாலிப்பவன்:புதுமையாய்ப் பாம்பணி அணிபவன்:சுடுகாட்டுச் சாம்பலைப்
பூசி,வெண்ணிறமாய்க் காட்சி அளிப்பவன்:பூதகணங்கள் சூழ்ந்து தொழுபவன்:கைலாசன்.
அவன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி.
தவறான சிந்தை கொண்ட வேள்விக்குத் தக்கன் பலி ஆனான்:கர்வத்தால் பிரமனும்
ஒருதலை இழந்தான்:காலினால் அந்தகனும்,கண்ணால் மன்மதனும்,மாய்ந்தனர்:
சூலத்தால் இயமனும்,சிரிப்பினால் திரிபுர அரக்கர்களும் மாய்ந்தனர்:உலக நன்மைக்காக
சம்ஹாரம் நடத்திய கைலாசன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி.
சுந்தரனை,""பித்தா"பேயா"என்றெல்லாம் பேசவைத்துப் பின் நண்பனாய்,உறவாய் ஏற்றுக்கொண்டவன்:குளக்கரையில் நின்று அழுத ஞான சமபந்தனுக்குப் பாலூட்டிய
மலைமகளின் மனத்தகத்தே உறைபவன்:சமண சமயச் சேர்க்கையால் நோயுற்று வாடிய திருநாவுக்கரசநின் மனமும் உடலும் மாற்றி அடியவராய் ஏற்றுக்கொண்டவன்:
நமசிவாய"என்னும் ஐந்தெழுத்து அருள் நோக்கம் கொண்ட கைலாசன் வீற்றிருக்கும் ஊர்
கன்னியாகுடி.
எனப்போற்றுவோம்
தமிழ்ச் சான்றோர்கள் சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்தனர்:அதே முறை தழுவி நானும்
இந்நூல் பாடலுற்றேன்"கன்னியாகுடிக் கைலாச நாதர் புகழ் பாடுவதே "கன்னியாகுடிக்
கலம்பகம்.
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு
பொன்னானைப் பூத்துக் குலுங்கும் கொன்றையானை
பெண்ணாளைப் பாகம்கொடு தண்கன்னி காப்பவனை
மண்ணெல்லாம் புரப்பவனை மனத்தகத்தே நிலைத்திடுவோம்.
தாழிசை
அனலேந்தி அழலானான்:அணிகங்கை முடியமர்த்திப்
புனலானான்:புன்னாகக் கங்கணத்தால் புதுமையானான்:
வனக்காட்டில் பிணச்சாம்பல் தனைப்பூசி ஒளியானான்:
கணப்பூதம் சூழ்ந்துதொழும் கைலாசன் கன்னியானே .
வேள்விபலி தக்கனெனில் வேதபலி பிரம்மனாவான்:
கால்மிதித்து அந்தகனும்,கண்பொரித்து மன்மதனும் ,
சூலத்தால் காலயமன் சிரிப்பினால் திரிபுரமும்,
ஞாலம்கா சம்ஹாரன் கைலாசன் கன்னியானே.
சுந்தரனைப் பேசவிட்டுச் சொந்தபந்தம் காட்டியவன்:
மைந்தனழப் பாலூட்டிய மாதரசியின் உடனுறைவோன்:
நைந்தமனச் சமயத்தால் நைந்தவுடல் மாற்றியேற்றவன்:
ஐந்தெழுத்து அருள்நோக்கக் கைலாசன் கன்னியானே
தனிச்சொல்
எனப்போற்றி,
சுரிதகம்
முந்துதமிழ் முன்னோர்கள் மூவரிலும் மூத்தோனைச்
செந்தமிழால் போற்றிய செம்மைவழி -----வந்தமுறை
பைந்தமிழில் பாடலுற்றேன் பா.
சான்றோர் போற்றியே சாற்றினேன் கலம்பகம்
ஆன்ற கன்னி அற்புதன் புகழே. 2
பொருள்
பொன்னார் மேனியன்:பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்மாலை அணிந்தவன்:
மலைமகளை தன்னுடலில் ஒருபாகமாகக் கொண்டவன்;கண்ணியாகுடியையும்
உலகையும் காப்பவன்;கைலாசநாதர்"என்னும் திருப்பெயர் கொண்ட இறைவனின் புகழ்
பாடுதலே நூலின் நோக்கமாகும்.
தீயைக் கையிலே ஏந்தித் தீயாகவே காட்சி தருபவன்:தலையில் தாங்கிய கங்கையால்
குளிர்ச்சி மிக்க அருள் பாலிப்பவன்:புதுமையாய்ப் பாம்பணி அணிபவன்:சுடுகாட்டுச் சாம்பலைப்
பூசி,வெண்ணிறமாய்க் காட்சி அளிப்பவன்:பூதகணங்கள் சூழ்ந்து தொழுபவன்:கைலாசன்.
அவன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி.
தவறான சிந்தை கொண்ட வேள்விக்குத் தக்கன் பலி ஆனான்:கர்வத்தால் பிரமனும்
ஒருதலை இழந்தான்:காலினால் அந்தகனும்,கண்ணால் மன்மதனும்,மாய்ந்தனர்:
சூலத்தால் இயமனும்,சிரிப்பினால் திரிபுர அரக்கர்களும் மாய்ந்தனர்:உலக நன்மைக்காக
சம்ஹாரம் நடத்திய கைலாசன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி.
சுந்தரனை,""பித்தா"பேயா"என்றெல்லாம் பேசவைத்துப் பின் நண்பனாய்,உறவாய் ஏற்றுக்கொண்டவன்:குளக்கரையில் நின்று அழுத ஞான சமபந்தனுக்குப் பாலூட்டிய
மலைமகளின் மனத்தகத்தே உறைபவன்:சமண சமயச் சேர்க்கையால் நோயுற்று வாடிய திருநாவுக்கரசநின் மனமும் உடலும் மாற்றி அடியவராய் ஏற்றுக்கொண்டவன்:
நமசிவாய"என்னும் ஐந்தெழுத்து அருள் நோக்கம் கொண்ட கைலாசன் வீற்றிருக்கும் ஊர்
கன்னியாகுடி.
எனப்போற்றுவோம்
தமிழ்ச் சான்றோர்கள் சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்தனர்:அதே முறை தழுவி நானும்
இந்நூல் பாடலுற்றேன்"கன்னியாகுடிக் கைலாச நாதர் புகழ் பாடுவதே "கன்னியாகுடிக்
கலம்பகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக