கன்னியாகுடிக் கலம்பகம்
காப்பு
நேரிசை வெண்பா
உலக முதன்மை உயிர்களின் காப்பு,
தலத்தமர் தந்தி!நவிலும் -----கலைகளின்
மேலவ!கன்னிக் கலம்பகம் மேன்மையுறக்
காலடி போற்றினேன் கா. 1
பொருள்
உலகத்தோரால் எல்லாவற்றிற்கும் முதன்மை பெற்றவன் எனப்போற்றப்படுபவனே!அனைத்து உயிர்களையும் காப்பவனே! எல்லாக் கோயில்களிலும் அமர்ந்திருக்கும் யானைமுகா! நவிலும்
கலையாம் நான்மறைகளின் நாயகனே!"கன்னியாகுடிக் கலம்பகம் "என்னும் கைலாச நாதரின்
பெருமை பேசும் இந்நூல் மேன்மை பெற வேண்டி,உன்னைப் பணிந்து போற்றுகின்றேன்.காத்திடுவாய்.
காப்பு
நேரிசை வெண்பா
உலக முதன்மை உயிர்களின் காப்பு,
தலத்தமர் தந்தி!நவிலும் -----கலைகளின்
மேலவ!கன்னிக் கலம்பகம் மேன்மையுறக்
காலடி போற்றினேன் கா. 1
பொருள்
உலகத்தோரால் எல்லாவற்றிற்கும் முதன்மை பெற்றவன் எனப்போற்றப்படுபவனே!அனைத்து உயிர்களையும் காப்பவனே! எல்லாக் கோயில்களிலும் அமர்ந்திருக்கும் யானைமுகா! நவிலும்
கலையாம் நான்மறைகளின் நாயகனே!"கன்னியாகுடிக் கலம்பகம் "என்னும் கைலாச நாதரின்
பெருமை பேசும் இந்நூல் மேன்மை பெற வேண்டி,உன்னைப் பணிந்து போற்றுகின்றேன்.காத்திடுவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக