வியாழன், 18 ஜனவரி, 2018

                             காப்புப்பருவம்
  பிள்ளைத் தமிழின்    முதற்பருவம்   காப்புப் பருவம்    ஆகும்.விநாயகர்,
சிவபெருமான்,திருமால்    போன்ற தெய்வங்களைப்   பாட்டுடைத்  தலைவியாம்   கல்யாணி அம்மையைக்     காத்தருளுமாறு   வேண்டுதல்.



                                   செங்கீரைப்பருவம்

பிள்ளைத்   தமிழின்    இரண்டாம்   பருவம்   செங்கீரைப்  பருவம்  ஆகும்.
குழந்தை    தன்    தலையைத்    தூக்கிக்கொண்டு,இரு   கைகளையும்
தரையில்   ஊன்றி,   ஒருகாலை  மடக்கியும்,  மற்றொரு   காலைப்  பின்புறமாய்    நீட்டியும், விளையாடுவது    செங்கீரை    என்னும்     பருவ
விளையாட்டாகும்.பாட்டுடைத்     தலைவியைக்    குழந்தையாக்கி,அவளது
பெருமைகளைப்   பேசிச் ,செங்கீரை   ஆட்டம்   ஆடுக,எனவேண்டுதல்.


                                       பெண்பாற்பிள்ளைத் தமிழின்   சிறப்புமிக்க   பருவங்கள்
மூன்றில்   ஒன்று  இது. பிள்ளைத்தமிழின்   கடைசிப் பருவமும் இதாகும்.
பாட்டுடைத்   தலைவியின்   பெருமைகளைப்  பேசி,ஊஞ்சல்   ஆடுக,  என
வேண்டுதல். இருப்பத்து  மூன்றாம்     திங்களில்   நடைபெறுவது.


                                                  வாரானைப்பருவம்

தத்தித் தத்தி   நடந்து  வரும்  குழந்தையைத்   தன்னிடம்   வருமாறு   அழைத்தல்    வாரானைப்பருவம்   ஆகும்.பதின் மூன்றாம்   திங்களில்
நடைபெறுவது.அம்மையைக்   குழந்தையாக்கி,அம்மையின்   பெருமை
பேசி  அழைப்பது.


                                                    தாலப்பருவம்

    பிள்ளைத்  தமிழின்  மூன்றாம்  பருவம்  இது.பாட்டுடைத்    தலைவியைக்
குழந்தையாக்கித்   தொட்டிலில்  இட்டு,உறங்கவைக்கத்    தொட்டிலை
ஆட்டியபடித்  தலைவியின்  பெருமைகளைப்  பேசுவது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக